கொழும்பு மாநகரசபையிலும் கொரொனா பீதி: ஊழியர்களிற்கு பரிசோதனை

 கொழும்பு மாநகர சபையின் ஊழியர்கள் அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த தகவலை மாநகர சபை ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபையின் பெண் ஊழியர் ஒருவரது தாயார், மினுவங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்ற நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகிவிட்டது.

இந்த அச்சம் காரணமாகவே மேற்படி ஊழியர்கள் அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டு வருகின்றது.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.