வாழைச்சேனையில் ஊரடங்கு அமுலாகும்?


 பேலியகொடை மீன் சந்தைக்கு வாழைச்சேனையில் இருந்து மீன் கொண்டு சென்றவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பி.சி.ஆர் பரிசோதனை செய்தவர்களில் பதினொரு பேருக்கு கொரோனா தொற்றுள்ளதாக உறுதிப்படுத்தியதையடுத்து வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் பிரதேச உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட உயர்மட்ட மாநாடு இன்று (24) மதியம் இடம்பெற்றது.

இதன்படி வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்கு உள்ளான பதினொரு பேரும் வசித்துவரும் வீதிகளை தனிமைப்படுத்தவும், தேவை ஏற்படின் இன்று மாலை தொடக்கம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.