கிளிநொச்சியில் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சிப்பாய்!

 கிளிநொச்சி – இயக்கச்சி படை முகாமிலுள்ள இராணுவச் சிப்பாய் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று சனிக்கிழமை அதிகாலையில் இடம் பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த இராணுவச் சிப்பாய், பெண் ஒருவரைக் காதலித்து வந்ததாகவும்,

இந்நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக குறித்த பெண், இராணுவ வீரருடன் தொடர்பை துண்டித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதனையடுத்து இராணுவச் சிப்பாய் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் இராணுவப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.