கொரோனா பரிசோதனைக்கு காத்திருந்தவர் மரணம்!


 புத்தளம் – கற்பிட்டி வைத்தியசாலையில் கொரோனா பரிசோதனைக்கு காத்திருந்த மதுரங்குளியை சேர்ந்த 32 வயதுடைய ஒருவர் இன்று (24) மரணமடைந்துள்ளார்.

கற்பிட்டியில் இருந்து பேலியகொடை மீன் சந்தைக்கு மீன் கொண்டு சென்ற 40 பேருக்கு இன்று கொரோனா (பிசிஆர்) பரிசோனை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது குறித்த சந்தைக்கு மீன் கொண்டு சென்ற சாரதியான குறித்த நபர் பரிசோதனைக்கு முன்னரே மரணமடைந்து விட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.