தூங்கிக்கொண்டு இருந்த மூன்று சகோதரிகள் மீது ஆசிட் வீச்சு!

 இந்தியாவில் உத்தரபிரதேசத்தின் பாஸ்கா எனும் கிராமத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த மூன்று சகோதரிகள் மீது ஆசிட் வீசப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது.

பாதிக்கபட்ட மூன்று பேரும் 8, 12, மற்றும் 17 வயதுடைய சகோதரிகள் என்றும், அடையாளம் தெரியாத நபரால் ஆசிட் தாக்கௌதலுக்கு உள்ளானதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில்சிறுமிகளில் இரண்டு பேருக்கு சிறு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன, ஒருவர் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக கோண்டா போலீசார் யாரையும் கைது செய்யவில்லை.

இது தொடர்பில் பொலிஸார் கூறுகையில்,

வீட்டில் திறந்து இருந்த ஜன்னலில் வழியாக மர்ம நபர் ஆசிட் வீசிய நிலையில்,

மூத்த சகோதரிக்கு முகம் மற்றும் மார்பில் பலத்த காயம் ஏற்பட்டது, மேலும் இரண்டு சகோதரிகளுக்கு கைகளில் சிறு காயங்கள் உள்ளன.

அவர்கள் மூவரும் கோண்டா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாக்குதல் நடத்தியவர் குடும்பத்தைப் பற்றி அறிந்திருந்ததாகவும், இரண்டாவது மாடியில் ஒரு அறையில் சிறுமி தூங்குவதை அறிந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

எனினும் தாக்குதல் நடத்தியவர் மற்றும் குற்றத்தின் பின்னணியில் உள்ள காரணத்தை இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.