அர்மீனியா, அசர்பைஜான் மீது குற்றச்சாட்டு!

 


அர்மீனியா தனது எரிவாயு மற்றும் எண்ணெய் குழாய்களைத் தாக்க முயற்சித்ததாக, அசர்பைஜான் குற்றம் சாட்டியுள்ளது.


இதுகுறித்து அசர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ் துருக்கிய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில், “அர்மீனியா எங்கள் குழாய்களைத் தாக்கி கட்டுப்பாட்டைக் கொண்டுவர முயற்சிக்கிறது. அர்மீனியா அங்குள்ள குழாய்களைக் கட்டுப்படுத்த முயன்றால், அதன் விளைவு அவர்களுக்கு கடுமையாக இருக்கும் என்று நான் சொல்ல முடியும்” என கூறினார்.


எனினும் இந்த குற்றச்சாட்டினை அர்மீனியா மறுத்துள்ளது. அத்துடன் மனிதாபிமான யுத்த நிறுத்தத்தை மீறி, அர்மீனிய இனத்தால் நிர்வகிக்கப்படும் சிறிய நிலப்பரப்பின் கட்டுப்பாட்டை அசர்பைஜான் படைகள் கைப்பற்ற முயற்சிப்பதாக கூறியுள்ளது.


இதனிடையே துருக்கிய ஜனாதிபதி தயிப் எர்டோகன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தி நாகோர்னோ-கராபாக் பிரச்சினைக்கு அங்காரா ஒரு நிரந்தர தீர்வை விரும்புவதாக தெரிவித்தார்.


இதன்போது, நாகோர்னோ-கராபாக் மோதலில் மத்திய கிழக்கு போராளிகள் பங்கேற்பது குறித்து புடின் தனது கவலைகளை வெளிப்படுத்தினார். ஆனால் இதனை அங்காரா மறுத்தது.


மோதலில் மாஸ்கோ- மத்தியஸ்த போர்நிறுத்தத்தின் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர் என கிரெம்ளின் தெரிவித்துள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.