விஜய்சேதுபதிக்கு கவியரசரின் அறிவுரை!!

 


விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘800’ திரைப்படத்திற்கும் எதிர்பாராத வகையில் மிகப்பெரிய எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது படக்குழுவினர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. விஜய் சேதுபதி இது குறித்து என்ன முடிவு எடுப்பார் என்று தமிழ் திரையுலகமே காத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


இயக்குனர் இமயம் பாரதிராஜா, சீமான், சீனு ராமசாமி, கவிஞர் தாமரை உள்பட திரையுலக பிரபலங்கள் பலர் இந்த படத்திற்கு வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்து விஜய் சேதுபதிக்கு அறிவுரையும் எச்சரிக்கையையும் மாறி மாறி தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் கவியரசு வைரமுத்து அவர்கள் வளர்ந்து வரும் உங்களுக்கு வளர்பிறையில் கறை எதற்கு என்று கேள்வி எழுப்பி தனது பாணியில் ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார். அந்த டுவிட்டில் அவர் கூறியிருப்பதாவது:


கலையாளர்

விஜய் சேதுபதிக்கு…


சில நேரங்களில்

செய்து எய்தும் புகழைவிடச்

செய்யாமல் எய்தும் புகழே

பெரிதினும் பெரிது செய்யும்.


நீங்கள் வளர்ந்து வருகிறீர்கள்.

வளர்பிறையில் கறை எதற்கு?


இன உரிமைக்காகக்

கலை உரிமையை

விட்டுக் கொடுப்பதே விவேகம்;

நீங்கள் விவேகி.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.