கொரோனா அச்சம் - உணவுப்பொருட்கள் தட்டுப்பாடு!!

 


மக்கள் திடீரென உணவுப் பொருட்களை வாங்க குவிந்து வருவதால் சந்தையில் உணவு பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

அத்தியாவசிய உணவுகள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஜி.எஸ். நாதன் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஒரு வாரத்தில் விற்கப் பட வேண்டிய உணவுப் பொருட்கள் கடந்த வாரம் ஒரு நாளில் விற்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த வாரத்திற்குள் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பும் எனவும், அரிசி தவிர அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே மக்கள் இதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.