ஜனாதிபதி இரட்டை குடியுரிமை தொடர்பான பிரிவை நீக்க மறுப்பு!!
இரட்டை குடியுரிமை பெற்ற ஒருவர் அரசியலில் ஈடுபட அனுமதிக்கும் அரசியலமைப்பு விதிகளை மீளப்பெற வேண்டும் என்ற கோரிக்கை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஆத்திரமூட்டியதாக அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இரட்டை குடியுரிமை பெற்றவர்களில் நாட்டை நேசிக்கும் மற்றும் நாட்டுக்காக சேவை செய்ய விரும்பும் உள்ளனர் என்று ஜனாதிபதி கூறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரிவித்துள்ளார்.
20 வது திருத்தத்தில் இரட்டை குடியுரிமை தொடர்பான விதிகள் சமீபத்தில் நாடாளுமன்ற வாக்கெடுப்பைத் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டன.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக அமெரிக்க குடியுரிமையை கைவிட்டபோது அவர் சந்தித்த அசௌகரியங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டியதாகவும் வீரசுமன வீரசிங்க குறிப்பிட்டார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை