அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் உடல்நிலையில் முன்னேற்றம் - மருத்துவர்கள் அறிவிப்பு!!
கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உடல்நிலை மேம்பட்டு வருவதாக அவரது மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அவரை நாளை (திங்கட்கிழமை) மருத்துவமனையில் இருந்து வெளியேற்றலாம் என மருத்துவக் குழு இன்று அறிவித்துள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது உடல்நிலை மிகவும் சிறந்ததாக உள்ளதாக மருத்துவமனையில் இருந்து ருவிற்றர் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரொபேர்ட் ஓ’பிரையன், டொனால்ட் ட்ரம்ப் மிகவும் நன்றாக இருக்கிறார் என இன்று குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப் நேற்றுமுதல் வோல்டர் ரீட் தேசிய இராணுவ மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை