மினுவாங்கொட தொழிற்சாலை தொற்று - இராணுவத் தளபதியின் விசேட அறிவிப்பு!

 


மினுவாங்கொட பிரான்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்களுடன் நெருங்கிய தொடர்பினைப் பேணிய அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி, கடந்த செப்டம்பர் 23ஆம் திகதிக்குப் பின்னர் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் தொழில்புரிந்த எந்தவொரு நபருடனும் நெருங்கிய தொடர்பினை பேணிய அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மினுவாங்கொட கொரோனா கொத்தணியில் ஆயிரத்து 83 பேருக்கு இதுவரை வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் அதன், அநேகமான ஊழியர்கள் தற்போதைய நிலையில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

இதேவேளை, நாட்டில் தற்போது அடையாளம் காணப்பட்ட புதிய தொற்றாளர்கள் அனைவரும், மினுவாங்கொட கொத்தணியைச் சேர்ந்தவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக மட்டத்தில் எவரும் அடையாளம் காணப்படவில்லை என அவர்  குறிப்பிட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.