அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களுக்கு இடையேயான இரண்டாவது விவாதம் இரத்து!
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களுக்கு இடையேயான இரண்டாவது விவாதம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
உலக நாடுகளே எதிர்பார்த்துக் காத்திருக்கும் அமெரிக்க ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி பதவிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் 3ஆம் திகதி நடைபெற உள்ளது.
இதில் ஜனாதிபதி பதவிக்கு குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர்.
கடந்த மாதம் 29ஆம் திகதி ஓஹியோ மாகாணத்தில் நடைபெற்ற முதல் நேரடி விவாத நிகழ்ச்சியின் பின்னர், டொனால்ட் ட்ரம்புக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இதனால், புளோரிடா மாகாணத்தில் நடந்த திட்டமிடப்பட்ட இரண்டாவது நேரடி விவாத நிகழ்ச்சி, காணொளி காட்சி மூலம் நடைபெறும் என ஜனாதிபதி தேர்தலுக்கான விவாத ஒருங்கிணைப்பு ஆணையம் நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) அறிவித்தது.
இதற்கு இதற்கு ட்ரம்ப் மற்றும் எதிர்க்கட்சி வேட்பாளரான ஜோ பிடன் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அந்த விவாதம் இரத்து செய்யப்பட்டு, ஏற்கனவே திட்டமிட்டபடி ஒக்டோபர் 22ஆம் திகதி மூன்றாவது கட்ட விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை