முகக்கவசம் அணிய மறுப்போர் உடனடியாக தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுவார்கள் – ராணுவத்தினர் எச்சரிக்கை
முகக்கவசம் அணிய மறுப்போர் யாராக இருந்தாலும் அவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று இராணுவத்தினர் எச்சரித்துள்ளனர்.
அம்பாறை, கல்முனை, சவளக்கடை, சம்மாந்துறை,மத்தியமுகாம், அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் இன்று (திங்கட்கிழமை) காலை முதல் வீதியால் வருவோர், இடைநிறுத்தப்பட்டு முகக்கவசம் அணிந்து செல்லுமாறு இராணுவத்தினரால் அறிவுறுத்தப்பட்டனர்.
இவ்வாறு முகக்கவசம் அணியாது செல்பவர்கள் அடையாளம் காணப்பட்டு, சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு பாதசாரிகள், வாகன உரிமையாளர்கள் பேரூந்தில் பயணிப்பவர்கள் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
குறிப்பாக வைத்தியசாலை, வங்கிகள், அரச திணைக்களங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பொதுநிறுவனங்களில் தேவை நிமிர்த்தம் செல்லும் பொதுமக்கள், முகக்கவசங்களை அணிந்து செல்லுமாறு இராணுவத்தினர் கோரியுள்ளனர்.
கருத்துகள் இல்லை