அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் - முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம்

 கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு அனைத்து முச்சக்கர வண்டி சாரதிகளும் தமது ஆதரவினை வழங்குவார்கள் என்று அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

முச்சக்கர வண்டி சாரதிகள் அனைவரும் பயணிகள் தரவு பதிவை பதிவுசெய்வார்கள், மேலும் கடுமையான சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுவார்கள் என்றும் சங்கத்தின் தலைவர் சுதில் ஜெயருக் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்து ஓட்டுநர்களும் தங்கள் வாடிக்கையாளர்களுடன் பேசுவதைத் தவிர்ப்பதற்கும், முகக் கவசம் அணியாதவர்கள் வாகனத்திற்குள் நுழைவதைத் தடுப்பதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.