இலவசக் கல்விக்கு முரண்!!

 தரம் 5 இல் கல்வி பயி­லும் மாண­வி யைப் புல­மைப்­ப­ரி ­சில் பரீட்­சைக்­குத் தோற்­று­வ­தற்கு அனு­ மதி மறுக்­கப்­பட்ட சம்­ப­வம் இல­வச கல்­வியை வழங்­கும் நாட்­டுக்கு முர­ணா­னது என கல்வி அமைச்­சர் பேரா­சி­ரி­யர் ஜி.எல் பீரிஸ் தெரி­வித்­துள்­ளார்.


கொழும்­பில் இடம்­பெற்ற செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் கலந்­து­கொண்டு பேசிய அவர் இது தொடர்­பில் மேலும் தெரி­விக்­கை­யில்;


நிக்­க­வரெட்­டிய கல்வி வல­யத்­துக்­குட்­பட்ட பாட­சா­லை­யில் ஐந்­தாம் தரத்­தில் கல்வி பயி­லும் மாண­விக்கு நடை­பெற்ற புல­மைப்­ப­ரி­சில் பரீட்­சைக்­குத் தோற்­று­வ­தற்கு குறித்த பாட­சாலை அதி­ப­ரி­னால் அனு­மதி வழங்­கப்­ப­ட­வில்லை.


இச் சம்­ப­வம் தொடர்­பில் முறை­யான விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கு­மாறு உரிய தரப்­பி­ன­ருக்கு பணிப்­புரை விடுத்­துள்­ளேன். எக் கார­ணி­களை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு அந்த மாணவி பரீட்­சைக்­குத் தோற்­று­வ­தற்கு அனு­மதி வழங்க மறுத்­துள்­ளார் என்­பது முத­லில் அறி­யப்­பட வேண்­டும்.


விசா­ர­ணை­களை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு பார­பட்­ச­மின்­றி நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும்– – என்­றார்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.