முல்லையில் மீனவர்களைக் காணவில்லை!

 


முல்லைத்தீவு – மணற்குடியிருப்பு கடற்றொழிலாளர், சங்கத்திற்குட்பட்ட மீனவர்கள் இருவர் நேற்று முன் தினம் (19) அதிகாலை கடலுக்குச் சென்றநிலையில் இதுவரையில் கரைதிரும்பவில்லை.

குறித்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம் மற்றும் கடற்படையினர் உள்ளிட்டோருக்கு தெரியப்படுத்தப்பட்டது. எனினும் இது தொடர்பில் எதுவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அதேவேளை கடற்றொழில் அமைச்சரிடம் இது தொடர்பில் தெரியப்படுத்தியதுடன், அவரிடம் காணாமல் போன மீனவர்களைத் தேடுவதற்கு உலங்குவானூர்தி (கெலிஹாப்டர்) உதவியை கேட்டுள்ளதாகவும், இதுவரையில் கடற்றொழில் அமைச்சர் தரப்பிலிருந்து பதில் எதுவும் கிடைக்கவில்லை எனவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இன்று (21) முல்லைத்தீவு மீனவர்கள் அனைவரும் தாம் தொழிலுக்குச் செல்வதை நிறுத்தி மீனவர்களைத் தேடுவதற்குப் புறப்படவுள்ளனர்.

மேலும் காணாமல் போன மீனவர்களை மீட்டெடுக்க கடற்றொழில் அமைச்சு, நீரியல்வளத் திணைக்களம், கடற்படை என்பன தமக்கு உதவ முன்வர வேண்டுமெனவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.