பூசை அறை வழிபாடு - சில குறிப்புகள்!!

 


வீட்டில் பூசை அறையில் வழிபாடு செய்வதற்கு முன்பாகத் தெரிந்து கொள்ள வேண்டிய சில குறிப்புகள்


* சுப்ரபாதத்தை தினமும் காலை வேளையில் மட்டுமே கேட்க வேண்டும். அவ்வாறு கேட்க முடியாத நிலையில் மாலையில் கேட்பது சரியானதல்ல.


* வீட்டில் கடவுளை வணங்கும்போது நின்றவாறே தொழுவாமல் அமர்ந்தபடி தான் தொழுதல் வேண்டும்.


* ஈரமான உடையுடனும், ஓராடையுடனும், தலைக்குடுமியை முடியாமலும், தலையிலும், தோளிலும் துணியை போட்டுக் கொண்டோ, கட்டிக் கொண்டோ வழிபாடு செய்யக் கூடாது.


* பூஜையின்போது விபூதியை நீரில் குழைத்துப் பூசக் கூடாது. தீட்சை பெற்றவர்கள் மட்டுமே விபூதியை நீரில் குழைத்துப் பூசலாம்.


* காலை, மாலை வேளைகளில் யாராவது தூங்கிக் கொண்டிருக்கும்போது விளக்கேற்றக்கூடாது. தூங்குபவர்கள் எழுந்த பிறகுதான் விளக்கேற்ற வேண்டும். தூங்குபவர்களின் தலைக்கு நேராகத் தேங்காய் உடைக்கக் கூடாது.


* கஷ்டங்கள் நீங்க, நினைத்தது நடக்க எளிய வழி தீபம் ஏற்றுவதுதான் தீப ஒளி இருக்குமிடத்தில் தெய்வ அணுக்கிரகம் நிறைந்திருக்கும்.


* வீட்டில் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தீபம் ஏற்றி வைக்கலாம்.


* விளக்கை ஏற்றும்போது, வீட்டில் பின் வாசல் இருந்தால் அதன் கதவைச் சாத்தி விட வேண்டும்.


* விளக்கு எரிந்து கொண்டிருக்கும் போது கைவிரலால் எண்ணெய்யிலுள்ள தூசியை எடுப்பதோ திரியைத் தூண்டுதோ கூடாது.




* தீபத்தில் உள்ள எண்ணெய்தான் எரிய வேண்டுமேத் தவிர, திரி அல்ல. திரி எரிந்து கருகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் எரிந்து கொண்டிருக்கும் தீபத்தை ஆண்கள் அணைக்கக் கூடாது.


* வீட்டில் பூஜை அறையில் தெய்வப்படங்களுடன் மறைந்த மூதாதையர் படத்தைச் சேர்த்து வைக்காமல் தனியாக வைத்து வணங்கினால் சிறந்த பலன் கிடைக்கும்.


* பூஜை அறையில் தெய்வப்படங்களை வடக்குப் பார்த்து வைத்தால் சாபமுண்டாகும்.


* சனி பகவானை வேண்டும் பொழுது ஒரு போதும் வீட்டில் எள்விளக்கு ஏற்றக் கூடாது.


* விரத தினத்தில் தாம்பூலம் தரித்தல், பகல் உறக்கம், தாம்பத்திய உறவு, சண்டையிடுதல் கூடாது.

உ. தாமரைச்செல்வி

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.