பூசை அறை வழிபாடு - சில குறிப்புகள்!!
வீட்டில் பூசை அறையில் வழிபாடு செய்வதற்கு முன்பாகத் தெரிந்து கொள்ள வேண்டிய சில குறிப்புகள்
* சுப்ரபாதத்தை தினமும் காலை வேளையில் மட்டுமே கேட்க வேண்டும். அவ்வாறு கேட்க முடியாத நிலையில் மாலையில் கேட்பது சரியானதல்ல.
* வீட்டில் கடவுளை வணங்கும்போது நின்றவாறே தொழுவாமல் அமர்ந்தபடி தான் தொழுதல் வேண்டும்.
* ஈரமான உடையுடனும், ஓராடையுடனும், தலைக்குடுமியை முடியாமலும், தலையிலும், தோளிலும் துணியை போட்டுக் கொண்டோ, கட்டிக் கொண்டோ வழிபாடு செய்யக் கூடாது.
* பூஜையின்போது விபூதியை நீரில் குழைத்துப் பூசக் கூடாது. தீட்சை பெற்றவர்கள் மட்டுமே விபூதியை நீரில் குழைத்துப் பூசலாம்.
* காலை, மாலை வேளைகளில் யாராவது தூங்கிக் கொண்டிருக்கும்போது விளக்கேற்றக்கூடாது. தூங்குபவர்கள் எழுந்த பிறகுதான் விளக்கேற்ற வேண்டும். தூங்குபவர்களின் தலைக்கு நேராகத் தேங்காய் உடைக்கக் கூடாது.
* கஷ்டங்கள் நீங்க, நினைத்தது நடக்க எளிய வழி தீபம் ஏற்றுவதுதான் தீப ஒளி இருக்குமிடத்தில் தெய்வ அணுக்கிரகம் நிறைந்திருக்கும்.
* வீட்டில் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தீபம் ஏற்றி வைக்கலாம்.
* விளக்கை ஏற்றும்போது, வீட்டில் பின் வாசல் இருந்தால் அதன் கதவைச் சாத்தி விட வேண்டும்.
* விளக்கு எரிந்து கொண்டிருக்கும் போது கைவிரலால் எண்ணெய்யிலுள்ள தூசியை எடுப்பதோ திரியைத் தூண்டுதோ கூடாது.
* தீபத்தில் உள்ள எண்ணெய்தான் எரிய வேண்டுமேத் தவிர, திரி அல்ல. திரி எரிந்து கருகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் எரிந்து கொண்டிருக்கும் தீபத்தை ஆண்கள் அணைக்கக் கூடாது.
* வீட்டில் பூஜை அறையில் தெய்வப்படங்களுடன் மறைந்த மூதாதையர் படத்தைச் சேர்த்து வைக்காமல் தனியாக வைத்து வணங்கினால் சிறந்த பலன் கிடைக்கும்.
* பூஜை அறையில் தெய்வப்படங்களை வடக்குப் பார்த்து வைத்தால் சாபமுண்டாகும்.
* சனி பகவானை வேண்டும் பொழுது ஒரு போதும் வீட்டில் எள்விளக்கு ஏற்றக் கூடாது.
* விரத தினத்தில் தாம்பூலம் தரித்தல், பகல் உறக்கம், தாம்பத்திய உறவு, சண்டையிடுதல் கூடாது.
உ. தாமரைச்செல்வி
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை