மினுவாங்கொட கொரோனா கொத்தணி: மேலும் 39 பேருக்கு தொற்று!

 


நாட்டில் மேலும் 39 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 13 பேர் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்கள் எனவும் ஏனைய 26 பேர் குறித்த தொழிலாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் இன்று மட்டும் இதுவரை 61 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.


இதன்படி, இதுவரை மினுவங்கொட கொரோனா தொற்று கொத்தணியில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 75ஆக அதிகரித்துள்ளது.


இந்நிலையில், இதுவரை நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஐயாயிரத்து 536ஆகப் பதிவாகியுள்ளது.


இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து இதுவரை மூவாயிரத்து 403 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இன்னும் இரண்டாயிரத்து 81 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.


நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 13 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.