பேருந்தில் பயணம் செய்த பெண்ணொருவருக்கு கொரோனா!!

 


கடவத்தையிலிருந்து காலிக்கு பேருந்தில் பயணம் செய்த பெண்ணொருவர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.


இதனையடுத்து, அந்தப் பேருந்தில் பயணம் செய்த ஏனைய 35 பயணிகளை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.


தெற்கு அதிவேக நெடுஞ்சாலை ஊடாக ஒக்டோபர் நான்காம் திகதி கடவத்தையிலிருந்து காலிக்குச் சென்ற பேருந்தில் பயணம் செய்த பெண்ணே கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமை சோதனையின்போது உறுதியாகியுள்ளது.


மினுவங்கொட ஆடைதொழிற்சாலை ஊழியர் ஒருவரே இவ்வாறு பேருந்தில் பயணம் செய்துள்ளார் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


அவருடன் பேருந்தில் பயணம் செய்தவர்கள் அவருடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள சுகாதார அதிகாரிகள் அவர்களை தங்களுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.


எனினும் பேருந்தின் சாரதியும் நடத்துனரும் மாத்திரமே தங்களை தொடர்புகொண்டுள்ளதாகவும் அவர்களை தனிமைப்படுத்தலில் இருக்குமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.


இந்த நிலையில், குறித்த 35 பயணிகள் இன்னமும் தங்களை தொடர்புகொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ள அதிகாரியொருவர், அவர்களால் அவர்களுக்கும் சமூகத்திற்கும் ஆபத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.