நாவலப்பிட்டி பிரதான வீதியில் வீதிப் போக்குவரத்து பாதிப்பு!!

 


தலவாக்கலை-நாவலப்பிட்டி பிரதான வீதியில் கெட்டபுலா பகுதியில் பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததால் அவ்வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


இதனையடுத்து குறித்த பிரதேசவாசிகள் இணைந்து வீதியின் குறுக்கே வீழ்ந்த மரத்தினை வெட்டி அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


குறித்த மரம் முறிந்து வீழ்ந்ததால் சுமார் இரண்டு மணித்தியாலயங்களுக்கு மேல், போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. இதனால் கெட்டபுலா, நாவலப்பிட்டி ஆகிய பகுதிகளுக்குச் சென்ற பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.


அத்தோடு, தொலைபேசி இணைப்புகள் மீது மரம் முறிந்து வீழ்ந்ததால் அப்பகுதிக்கான தொலைதொடர்பு சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.