ஏக்கம் - கவிதை!!
ஆறாத வார்த்தையெல்லாம்
ஆழி விழியால்,
நோகாமல் நீயும்
சொல்லித் தான் போகிறாய்...
தோதான
உனது வார்த்தைகளை
என் உள்ளக் கடலில்
தோணியாய் நீயும்
தொலைத்து விட்டு !
கடலினை தொலைத்த
படகே ...
உன் பார்வையால்
கண்டெடுத்து விடு....
இமைகளால்
தொலைத்து விட்ட
கதிரினை
உன் சுட்டு விழி கொண்டு
சூரியனாய்
மீட்டெடுத்து கொடு !
நீ இமைகள்
திறக்க வேண்டி தான்...
விடியலுக்காய்
காத்திருக்கும் ...
என் பட்டாம் பூசிகள்
உள்ளம் விசும்ப ஏங்குதடி!
கதிரே
உன் பார்வை பட்டு
வெளிசத்தில்
இதழ்கள் விரித்து
பூப்பதற்காக ஏங்குதடி ...
என் உயிர் மொட்டுக்கள்!
- மன்சூர் கவி கான்
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை