நாடாளுமன்றுக்கு ரிஷாட் பதியுதீனை அழைத்துவர நடவடிக்கை!
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை வரும் வியாழக்கிழமை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வருவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்ற அதிகாரம் மற்றும் சிறப்புரிமை சட்டத்தின் கீழ் அவரை மன்றுக்கு அனுப்புமாறு சிறைச்சாலை திணைக்களத்துக்கு அறிவிக்க இன்று நடந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுச் சொத்துக்கள் முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு அனுமதிக்க வேண்டுமென நேற்றும் இன்றும் ஐக்கிய மக்கள் சக்தியினால் சபாநாயகரிடம் வலியுறுத்தப்பட்டது.
எனினும், அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதனால் அவருக்கு அனுமதி வழங்க முடியாதென சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டதாக சபாநாயகர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே நாடாளுமன்ற அதிகாரம் மற்றும் சிறப்புரிமை சட்டத்தின் கீழ் அவரை நாடாளுமன்றுக்கு அனுப்பும் முயற்சி இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை