துருக்கி-கீரிஸ் இடையில் அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம்!!

 


துருக்கி மற்றும் கீரிஸ் நாடுகள் இடையே, ஏஜியன் கடல்பகுதியை மையமாகக் கொண்டு 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.


இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளதாகவும், நால்வர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்ததுடன் 120 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.


இன்று மாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் இரு நாடுகளிலும் சேதம் ஏற்பட்டுள்ளது. அங்கு பல கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்துள்ள நிலையில் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், கடலோர மாகாணமான இஸ்மிரில் குறைந்தது 120 பேர் காயமடைந்ததாக துருக்கியின் சுகாதார அமைச்சர் பஹ்ரெடின் கோகா தெரிவித்துள்ளார்.


இதேவேளை, இஸ்மிரில் நிலநடுக்கம் ஏற்பட்ட பின்னர் கடல் நீர் நிலப்பகுதிக்குள் புகுந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.