உடுவிலில் 9 வயது சிறுமிக்கு தொற்று!


 யாழ்ப்பாணம் – உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் இன்று (03) ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சங்குவேலியில் வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் இருந்த குடும்பத்தை சேர்ந்த 9 வயது சிறுமிக்கே தொற்று உள்ளமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இடம்பெற்ற பிசிஆர் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

கொட்டாஞ்சேனையில் நட்சத்திர விடுதியில் ஒன்றில் பணியாற்றும் தந்தையிடம் சென்று திரும்பிய தாய் மற்றும் மகள்கள் இருவர் வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்.

அவர்கள் மூவரிடமும் நேற்று மாதிரிகள் பெறப்பட்டன. அவர்களில் 9 வயதுச் சிறுமிக்கே தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

தாய்க்கும் மற்றொரு பிள்ளைக்கும் முதல் பரிசோதனையில் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்து சுய தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.