மக்கள் ஒத்துழைத்தாலே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்!


 வடமாகாணத்தில் பொதுமக்களின் ஒத்துழைப்பின்றி கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த முடியாது என வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ன தெரிவித்தார்.

யாழ்ப்பாண நகரில் பொலிஸாரினால் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு செயற்பாட்டில் ஈடுபட்டனர் குறித்த விழிப்புணர்வு செயற்பாட்டில் ஈடுபட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும்,

“தற்போது இலங்கையில் கொரோனா தொற்று அதிகளவில் பரவிவருகின்றது. வடக்கு மாகாணத்தில் நான் வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபராக பதவியேற்ற பின் கொரோனா ஒழிப்பு தொடர்பில் பொலிஸாரால் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் ஒரு அங்கமாக இன்றையதினம் யாழ்ப்பாண குடாநாட்டில் மக்கள் முக கவசம் அணிதல் தொடர்பான ஒரு விழிப்புணர்வு செயற்பாட்டினை மேற்கொண்டு வருகின்றோம். வடக்கில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். சுகாதார திணைக்கள சுகாதார நடைமுறைகளை கட்டாயமாக பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்.

அத்தோடு மக்கள் பெரும்பாலும் வீடுகளில் இருந்து தங்களுடைய கடமைகளைச் செய்வது மிகச் சாலச் சிறந்தது எனினும் வடக்கு மாகாணத்தில் குறித்த தொற்றினை கட்டுப்படுத்த வேண்டுமாக இருந்தால் பொதுமக்களின் ஒத்துழைப்புடனே அது சாத்தியமாகும்” – என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.