கரையொதுங்கும் பல இலட்ச கணக்கான மீன் குஞ்சுகள்!


 முல்லைத்தீவு இரட்டைவாய்க்கால் பகுதியில் திடீரென பல இலட்ச கணக்கான மீன் குஞ்சுகள் இன்றையதினம் கரையொதுங்கியுள்ளன.

நந்திக்கடலில் இருந்து இரட்டைவாய்க்கால் ஊடாக முல்லைத்தீவு பெரும் கடற்கரைக்கு சங்கமிக்கும் வாய்க்காலிலேயே இந்த அதிசய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று மாலை தாெடக்கம் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாகவே குறித்த மீன் குஞ்சுகள் உயிருடன் கரையொதுங்கியுள்ளன.

இவ்வாறு கரையொதுங்கிய உயிர் மீன்குஞ்சுகள் கெழுத்தி இன வகையை சார்ந்த மீன் குஞ்சுகளாகும். குறித்த மீன்குஞ்சுகளை பொதுமக்கள் அதிசயத்துடன் பார்வையிடுவதோடு வலைவீசியும் பிடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.