விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற மனிதாபிமானமாக சென்றவர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு!

 



பிரான்சில் விபத்தில் சிக்கிய நபரை காப்பாற்ற சென்ற நபர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



பிராசின் Pézenas (Hérault) நகரில் கடந்த வெள்ளிக் கிழமை A75 நெடுஞ்சாலையில் மகிழுந்தில் பயணித்த நபர் ஒருவர், வீதி விபத்தில் மூவர் சிக்கி காயமடைந்துள்ளதை பார்த்துள்ளார்.


உடனடியாக தனது மகிழுந்தை நிறுத்திய அவர் அங்கிருந்து இறங்கி வீதியை கடந்து அவர்களை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார்.


ஆனால் துரதிஷ்டவசமாக காப்பாற்ற முயன்ற நபர் மீது பெரிய மகிழுந்து மோதி அவரை தூக்கி வீசி இருந்துள்ளது.


இதனால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.