கொரோனாவால் இறந்த முஸ்லிம்களின் உடல்களை புதைக்க தீவை தேடுகிறது அரசாங்கம்!

 


கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்யும் யோசனை அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது எனவும் தொலைவில் உள்ள தீவொன்றில் சடலங்களை அடக்கம் செய்வது குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும்அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

எனவே சடலங்களை அடக்கம் செய்வதற்குஅவ்வாறான தீவொன்றை கண்டுபிடிப்பதற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இது தொடர்பான இறுதிமுடிவை சுகாதார அதிகாரிகளே எடுப்பார்கள் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நகரங்களில் கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை புதைப்பது சாத்தியமில்லாவிட்டால் தொலைதூரத்தில் உள்ள தீவொன்றில் அவர்களது உடல்களை புதைக்கும் யோசனை அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.