மாங்காய் கொள்வனவு செய்ய வந்தவருக்கு கொரோனா
மாங்காய் விற்ற 3 குடும்பங்களும் அவர்களை சம்பந்தப்பட்டவர்களும் அதிரடியாக தனிமைப்படுத்தப்பட்டனர்.
அக்கரைப்பற்றில் இருந்து கொழும்புக்கு நடத்தப்படுகின்ற தனியார் பஸ் சேவையில் சாரதியாகக் கடமையாற்றுகின்ற வறக்காப்பொலயைச் சேர்ந்த ஒருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று இருப்பது பிசிஆர் சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் பறூஸா நக்பர், இன்று தெரிவித்தார்.
இதனையடுத்து, இந்தச் சாரதியுடன் நெருங்கிப் பழகியவர்களைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளில், அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரிகள் குழுவினர், கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் ஜி.சுகுணனின் ஆலோசனைப்படி ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை, தென் பகுதியிலிருந்து மாங்காய் கொள்வனவு செய்ய வந்த லொறி சாரதியுடன் உதவிக்கு வந்தவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்ததை அடுத்து, அக்கரைப்பற்றில் அவர் மாங்காய்களைக் கொள்வனவு செய்த மூன்று குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுமை குறிப்பிடத்தக்கது
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை