நிறைவேறியது வலி தெற்கு பிரதேச சபை பாதீடு!


 வலி தெற்கு பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான பாதீடு (பட்ஜெட்) வாக்கெடுப்பின்றி பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுளளது.

இந்த பாதீடு கூட்டம் இன்று காலை தவிசாளர் தர்ஷன் தலைமையில் இடம்பெற்றது. இக்கூட்டத்திற்கு 30 உறுப்பினர்களில் 26 உறுப்பினர்கள் சபைக்கு சமூகமளித்திருந்தனர்.

இதன்போது பாதீட்டை சபையில் தவிசாளர் முன்வைத்ததைத் தொடர்ந்து பாதீடு மீதான விவாதம் இடம்பெற்றது. தொடர்ந்து சபையில் இருந்த 26 உறுப்பினர்களில் 20 உறுப்பினர்கள் பாதீடு திட்டத்தினை ஏற்றுக்கொண்டனர். 6 உறுப்பினர்கள் மட்டும் ஆட்சேபனை தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.