மண்வெட்டியில் தட்டுப்பட்ட கைக்குண்டு!


 மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் கீழ் உள்ள காக்காச்சிவெட்டை பிரதேசத்தில் தனியார் காணியொன்றில் விவசாய நடவடிக்கைக்காக நிலத்தை வெட்டும்போது நிலத்தில் புதைத்து வைக்கப்பட்ட பிளாஸ்டிக் பாத்திரம் ஒன்றிலிருந்து கைக் குண்டு ஒன்றை நேற்று (14) மீட்கப்பட்டதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

காக்காச்சிவெட்டை பிரதேசத்தில் தனியார் காணியில் விவசாய நடவடிக்கைக்காக நிலத்தை சம்பவ தினமான நேற்று வெட்டும் போது நிலத்தில் புதைத்துவைக்கப் பட்டிருந்த பிளாஸ்டிக் பாத்திரம் ஒன்றில் கைக்குண்டு இருப்பதை கண்டு பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து பொலிஸ் நீதிமன்ற அனுமதியைப் பெற்று விசேட அதிரடிப்படை வெடிகுண்டு அகற்றும் பிரிவு மூலம் அதனை அகற்றுவதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் வெல்லாவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை இப்பகுதி கடந்த காலத்தில் விடுதைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.