மதுபானம், சிகரட்டுகள் போன்றவற்றிக்கு விஷேட வரி!


 மதுபானம், சிகரட்டுகள், தொலைத்தொடர்பு சூதாட்டம் மற்றும் வாகனங்கள் மீதான வரிகள் போன்ற பல்வேறு பண்டங்கள் சேவைகள் வரிகளுக்குப் பதிலாக தனியான ஒற்றை விசேட பொருட்கள் மற்றும் சேவைகள் வரியினை அறிமுகப்படுத்துவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்மொழிந்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற 2021 ஆம் ஆண்டிற்கான சம கால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உரையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வரி சேகரிப்பின் வினைத்திற​னை மேம்படுத்துவதற்கு அவர் இதனை முன்மொழிவதாக தெரிவித்திருந்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.