ஓட்டுமடச்சந்தியில் கோர விபத்து!


 யாழ்ப்பாணம் – ஓட்டுமடச்சதியில் இன்று (19) சற்றுமுன் மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிய கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து சம்பவத்தில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர.

யாழ்.நகரிலிருந்து ஆறுகால்மடம் நோக்கி பயணித்த ஆட்டோ மீது குறித்த வீதி ஊடாக யாழ்.நகரம் நோக்கி பணித்த பட்டா வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மோதியதுடன், அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீதும் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கின்றது.

இதன்போது படுகாயமடைந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.