தவசியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நடிகர்!

 


பிரபல குணசித்திர நடிகர் தவசி அவர்கள் சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது சிகிச்சை செலவு மொத்தத்தையும் திமுக எம்எல்ஏ சரவணன் அவர்கள் ஏற்றுக்கொண்டாலும் தவசியின் குடும்பத்தினருக்கு திரையுலகினர்களிடம் இருந்து நிதி உதவிகள் குவிந்து வருகிறது


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்பு, சிவகார்த்திகேயன், சூரி உள்பட பல நடிகர்கள் தவசியின் குடும்பத்தினருக்கு நிதியுதவி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவரான ரோபோ சங்கர் மதுரையில் தவசி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு நேரடியாக சென்று அவருக்கு ஆறுதல் கூறியதோடு நிதி உதவியும் செய்துள்ளார்


மேலும் தவசியை நேரில் சந்தித்த ரோபோ சங்கர் ’அந்த மீசையை நாங்கள் மீண்டும் பாக்கணும்னு சொல்லுங்க என்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தவசிக்கு ஆறுதல் கூறினார். நடிகர்கள் எல்லோருமே உங்களுடைய போட்டோவை பார்த்து மன வருத்தப்பட்டார்கள். நீங்கள் மீண்டு வர வேண்டும், தைரியமாக இருக்க வேண்டும். பழையபடி சிங்கம் மீண்டும் வரவேண்டும், அந்த மீசையை நாங்கள் பார்க்க வேண்டும்’ என்று ரோபோ சங்கர் ஆறுதல் கூறினார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.