கொழும்பில் மாத்திரம் 2000 பேருக்கு கொரோனா!!

 


கொழும்பில் இதுவரை 2000பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக பிரதீப் யாசரட்ண மேலும் கூறியுள்ளதாவது, “கொழும்பு மாவட்டத்தில் 5800குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சுமார் 20,000 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பு தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கின் கீழ் காணப்படுகின்றமையால், விநியோக சேவைகள்  ஊடாக அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும், விநியோக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு கொரோனா அச்சம் காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன

கொழும்பில் தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கு உலர் உணவுபொதிகளை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், உலர் உணவு பொதிகள் கிடைக்காத தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள், பொலிஸாருக்கோ அல்லது தங்கள் வீடுகளை நாளாந்தம் கண்காணிக்க வருகின்றவர்களுக்கோ தெரிவிக்கலாம். இல்லாவிடிள் தொலைபேசி ஊடாக கொழும்பு பிரதேச செயலகத்தை தொடர்புகொண்டு தெரியப்படுத்தலாம்” என குறிப்பிட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.