கொழும்பு முழுமையாக முடக்கப்படலாம் என தெரிவிப்பு!!

 


கொழும்பு மாவட்டத்தில் இதுவரை 2000 கொரோனா வைரஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் 5800 குடும்பங்களை தனிமைப்படுத்தியுள்ளதாக கொழும்பு பிரதேச செயலாளர் பிரதீப் யாசரட்ண தெரிவித்துள்ளார்.

சுமார் 20,000 பேர் தனிமைப்படுதப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கின் கீழ் காணப்படுகின்றது, இதனை நீடிக்கவேண்டுமா என்பது குறித்து இன்று தீர்மானிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பு மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு விநியோக சேவைகள் மூலம அத்திhயவசிய பொருட்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

எனினும் வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக விநியோக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கு உலர் உணவுபொதிகளை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன அவ்வாறான உலர் உணவு பொதிகள் கிடைக்காத தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் பொலிஸாருக்கோ அல்லது தங்கள் வீடுகளை நாளாந்தம் கண்காணிக்க வருபவர்களுக்கோ தெரிவிக்கலாம் அல்லது தொலைபேசி ஊடாக கொழும்பு பிரதேச செயலகத்தை தொடர்புகொள்ளலாம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.