உணவு ஆர்டர் செய்த பெண்ணுக்கு வந்ததோ 3 பாக்கெட் சிறுநீர் பார்சல்!


 வடக்கு லண்டனில் உணவு ஆர்டர் செய்த பெண்மணிக்கு, 3 பாக்கெட் சிறுநீர் டெலிவரி ஆனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

42 வயதுமிக்க 3 குழந்தைகளின் தாய் ஒருவர், இங்கிலாந்தில் இயங்கி வரும் ஆன்லைன் டெலிவரி சேவை நிறுவனமான Ocadoவில் தனது பிறந்தநாளை ஒட்டி உணவு ஆர்டர் செய்துள்ளார்.

மிச்செல் லியோனார்டு எனும் அந்த பெண்மணி, பிறந்தநாள் பார்ட்டி தருவதற்காக வடக்கு லண்டன் பகுதியில் இருந்து கடந்த வியாழக்கிழமை உணவு ஆர்டர் செய்துள்ளார்.

ஓகேடா டெவ்லிவரி செய்த பார்சலை மிச்செலின் மகன் அல்ஃபி திறந்து பார்த்த போது, அதில் 3 பை சிறுநீர் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மிச்செல் ஆர்டர் செய்ததோ, சிக்கன் விங்ஸ், பிரெட், க்ரிஸ்ப்ஸ் , ஒயின் மற்றும் சில ஸ்னாக்ஸ் உணவுகள் ஆகும். இந்த உணவுகளை தனது 22, 19 மற்றும் 14 வயது நிரம்பிய 3 குழந்தைகளுக்காக ஆர்டர் செய்திருந்தார் மிச்செல்.

இதுக்குறித்து சன் ஊடக நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “இது மிகவும் அருவருக்கத்தக்க செயல். அதுவும், கோவிட் சூழலில் இது மிகுந்த மனவருத்தம் மற்றும் அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.

உணவு டெலிவரி பேக்குகளை திறக்கும் போது, சிறுநீர் பைகளை கண்டு என் மகன் அதிர்ச்சி அடைந்தார். நான் இனிமேல் இந்த நிறுவனத்தில் உணவு ஆர்டர் செய்யவே மாட்டேன்” என்று கூறி இருந்தார் மிச்செல்.

மிச்செல், ஆன்லைனில் ஆர்டர் டெலிவரி செய்ய வந்த ஓட்டுநர் தான், நடுவழியே சிறுநீர் கழித்து, அந்த பைகளை தனக்கு டெலிவரி செய்திருக்க வேண்டும் என்று சந்தேகம் கொண்டார். இதுகுறித்து Ocadoவிற்கு கால் செய்து புகாரும் அளித்திருந்தார் மிச்செல்.

ஆனால், ocado நிறுவனம் மேற்கொண்ட விசாரணையின் போது தான், அந்த சிறுநீர் பாக்கெட் பரிசோதனைக்காக வேறு ஒரு நபர் அனுப்பியது என்றும், தவறுதலாக டெலிவரி செய்யப்பட்டதும் தெரியவந்தது. மறுநாளே, ocado நிறுவனம் பணத்தை ரீஃபண்ட் செய்தது மட்டுமின்று, மிச்செல் ஆர்டர் செய்த உணவையும் அனுப்பி வைத்தது.

இதுக்குறித்து ஆன்லைன் டெலிவரி நிறுவனம் மன்னிப்பு கோரியது மட்டுமின்றி, விசாரணை மேற்கொண்டும் வருகிறது. ஆன்லைன் டெலிவரி நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், “இந்த செயலுக்காக நாங்கள் வருத்தம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்.

இது மன்னிக்க முடியாத குற்றம் தான். இது குறித்து மேலும் நடவடிக்கை எடுக்க விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது” என்று கூறி இருந்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.