39 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா!
மேலும் 39 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இராஜகிரியவில் உள்ள தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த 23 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
அத்தோடு பொரெல்ல பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்ட 8 பொலிஸ் அதிகாரிகளுக்கும் , பாதுகாப்பு பிரிவில் இணைக்கப்பட்ட 02 அதிகாரிகளுக்கும் , கெசல்வத்த பொலிஸ் நிலையத்தில் இருவருக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில் மற்றைய கொரோனா நோயாளர்கள் பெட்டா மற்றும் நிகம்பு பொலிஸ் நிலையங்களிலும் , கொழும்பு நகர போக்குவரத்து பிரிவிலும் , குற்றப் புலனாய்வுத் துறையில் தளா ஒரு அதிகாரிக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை