தமிழக்தில் 89 இலட்சத்தை நெருங்கிய கொரோனா!


 இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத்தை அடைந்துவரும் நிலையில், இன்று இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக கொரோனா தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

அதன்படி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 89 இலட்சத்தை நெருங்கியுள்ள நிலையில் 82.90 இலட்சம் பேர் குணமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் அதே சமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி 88 இலட்சத்து 74 ஆயிரத்து 290 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 82 இலட்சத்து 90 ஆயிரத்து 370 பேர் குணமடைந்துள்ளனர், 4 இலட்சத்து 53 ஆயிரத்து 401 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை அங்கு கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,30, 519 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.