மதுபோதையில் இராணுவத்தினருடன் பொலிஸார் தகராறு!!


 யாழ்.கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லுாரியில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையம் மற்றும் கொரோனா மருத்துவமனைக்கு பாதுகாப்பு பணிக்காக அமர்த்தப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் இருவர் மதுபோதையில் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு கல்வியியற் கல்லுாரியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த குறித்த இரு பொலிஸாரும் அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினருடன் தகராறு புரிந்துள்ளனர்.

யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளரின் கண்காணிப்பில் இயங்கும் குறித்த தனிமைப்படுத்தல் நிலையம் மற்றும் மருத்துவமனையில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளுக்காக அமர்த்தப்பட்டிருக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை இரவுக் கடமைக்கு என கோப்பாய் பொலிஸ் நிலையத்திலிருந்து இரண்டு உத்தியோகத்தர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரும் மதுபோதையில் நள்ளிரவு 12 மணியளவில் அங்கிருந்த இராணுவத்தினருடன் முரண்பட்டுள்ளனர்.

அதனால் இராணுவச் சிப்பாய்கள் பொலிஸாரைத் தாக்கியதால் இரு தரப்புக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தையடுத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும்

கோப்பாய் பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவரால் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த நிலையில் மதுபோதையில் இருந்தமை மற்றும் கடமையைச் செய்யத் தவறிய குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கான பணிப்புரையை யாழ்ப்பாணம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் வழங்கியுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.