மட்டக்களப்பு துயிலும் இல்லத்திலும் நினைவுகூரலுக்குத் தடை விதிப்பு!


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரனுக்கு மாவீரர் நிகழ்வு மற்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் நிகழ்வு நடத்த நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. 

மட்டக்களப்பு மாவட்டம் மாவடி முன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் விளக்கேற்றி நினைவு கூருவதைத் தடுக்கும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற கட்டளை, கொக்கட்டிச்சோலை பொலிசாரினால் இன்று அரியநேத்திரனின் வீட்டுக்குச் சென்று வழங்கப்பட்டுள்ளது.

நீதிமன்றக் கட்டளைப்படி, வரும் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதிவரை மாவடி முன்மாரி துயிலும் இல்லத்தில், அரியநேத்திரனோ அவர் கட்சி சார்ந்தவர்களோ, ஏனையோர்களோ அவ்வாறான நினைவு தினம் நடத்தவும் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த தினத்தினைக் கொண்டாடவும் தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பா.அரியநேத்திரனுடன் அரசடித்தீவைச் சேர்ந்த நடராசா சுரேஷ், கொக்கட்டிச்சோலை குகதாஷ் முத்துலிங்கம், களுவாஞ்சிகுடி நாகலிங்கம் சங்கரப்பிள்ளை, நொச்சிமுனை சசிகரன் நிஷாந்தன் ஆகியோருக்கு எதிராகவும் இந்தத் தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.