மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் முக்கிய அறிவிப்பு!!

 


நாட்டின் தற்போதைய கொரோனா வைரஸ் பரவல் நிலைமை காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தொடர்ச்சியாக மருந்துகளை பெற்றுக்கொள்ளும் கிளினிக் நோயாளர்களுக்குரிய மருந்துகளை நோயாளர்களின் வீட்டிற்கே கொண்டு சேர்ப்பிப்பதற்கு வைத்தியசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைத் திட்டம் மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்துடன் இணைந்து அமுலாகிறது.

இந்த சேவைக்காக திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 3 மணி வரை தங்களது பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், கிளினிக் இலக்கம், சிகிச்சையளிக்கும் வைத்திய நிபுணரது பெயர் ,நோயாளர்கள் வசிக்கும் கிராம சேவையாளர் பிரிவு, பிரதேச செயலளார் பிரிவு என்பனவற்றைத் தெளிவாகத் தெரிவித்து மருந்துகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நோயாளர்கள் தமக்கான மருந்துகள் முடிவடைந்ததும் வைத்தியசாலையின் 065 3133330 அல்லது 065 3133331 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தமது விவரங்களை மாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.