கொரோனாவில் இருந்து மேலும் 227 பேர் மீண்டனர்!!

 


கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 227 பேர் முழுமையாக குணமடைந்து இன்று (புதன்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய கொரோனா வைரஸ் தொ்றறிலிருந்து முழுமையாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 858 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் இதுவரையில் 11 ஆயிரத்து 744 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 5 ஆயிரத்து 858 பேர் குணமடைந்துள்ள நிலையில் 5 ஆயிரத்து 863 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும், இந்த தொற்றுக்க உள்ளான 23 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.