கொழும்பில் வீதியில் மற்றுமொரு நபர் மரணம்


கொழும்பு கல்கிசை பகுதியில் வீதியில் சென்ற நபர் ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரதேச வாசிகள் பொலிசாருக்கு வழங்கிய தகவலை அடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உயிரிழந்தவர் கல்கிசை,தர்மபால வீதியை சேர்ந்த 80 வயது முதியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து முதியவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டின் சில இடங்களில் நேற்றும் இன்றும் இவ்வாறு வீதியில் மரணித்து விழுந்த சம்பவம் அதிகரித்து வருகின்றமையானது மக்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.