இலங்கையில் கொரோனாவால் குணமடைந்தோர் 15 ஆயிரத்தை கடந்தது!



இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 485 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 447ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை கொரோனா தொற்று உறுதியாகியோரின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்து 967 ஆக காணப்படுகின்றது.

இதில் 5 ஆயிரத்து 426 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 601 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

மேலும் இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 94 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.