வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் பலர் நாடு திரும்பினர்

 


கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 148 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

அதன்படி,  ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 83 இலங்கையர்கள் நேற்றிரவு டுபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அதேநேரம், தோஹாவிலிருந்து ஒருவரும் அவுஸ்ரேலியாவின் சிட்னியிலிருந்து 52 இலங்கையர்கள்களும் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தனர்.

அது மாத்திரமன்றி ஜப்பானின் நரிட்டோவிலிருந்து 12 இலங்கையர்களும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த பயணிகளுக்கு பி.சி.ஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து, அவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.