கொரோனாவால் பாதிக்கப்பட்டு தப்பியோடிய தாயும் மகனும் சிக்கினர்!
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், தப்பியோடிய தாயும் மகனும் எஹலியகொட பகுதியில் சிக்கியுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட எஹலியகொட பகுதியைச் சேர்ந்த இவர்கள் இருவரும் கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்தனர்.
இந்த நிலையில், நேற்றிரவு அங்கிருந்து தப்பிச் சென்றதையடுத்து அவர்களை தேடும் பணிகளில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.
இதனையடுத்து அவர்கள் எஹலியகொட, யாபா வீதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து இன்று காலை பிடிபட்டுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை