கொரோனாவால் அமெரிக்காவில் பத்து இலட்சம் குழந்தைகள் பாதிப்பு!


கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்று பரவியதிலிருந்து அமெரிக்காவில் இதுவரை சுமார் பத்து இலட்சம் குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு புதிதாக 1,12,000 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு இது மிக அதிகம் என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் குழந்தைகள் நல மையம் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவமனைகளின் கூட்டமைப்பு இணைந்து வெளியிட்ட புள்ளிவிபரத்தில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 12ஆம் திகதி வரை மொத்தம் 10,39,464 குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு இது மிக அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிப்பு வீதம் 11.5ஆக உள்ளது.

உலக அளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த முதல் நாடாக அமெரிக்கா உள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.