நடிகை கெளதமி வீட்டுக்குள் சுவரேறி குதித்த இளைஞரால் பரபரப்பு!


 நடிகை கெளதமி வீட்டில் திடீரென இளைஞர் ஒருவர் குடிபோதையில் சுவரேறி குதித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது


சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள வீட்டில் நடிகை கெளதமி வசித்து வருகிறார். இந்த நிலையில் திடீரென நடிகை கெளதமி வீட்டுக்குக்ள் குடி போதையில் இளைஞர் ஒருவர் சுவர் ஏறி குதித்ததாக தெரிகிறது. இது குறித்த தகவல் காவல்துறைக்கு வந்ததை அடுத்து நீலாங்கரை போலீசார் கௌதமி வீட்டுக்கு விரைந்து சென்று போதையில் இருந்த அந்த இளைஞரை கைது செய்தனர்


நடிகை கௌதமி வீட்டில் சுவரேறி குதித்த இளைஞனின் பெயர் பாண்டியன் எனவும் அவர் பெயிண்டர் ஆக வேலை செய்து வருவதாகவும் விசாரணையில் தெரிய வந்தது. குடிபோதையில் என்ன செய்வது என்று தெரியாமல் நடிகை கௌதமி வீடு என்றே தெரியாமல் அவர் சுவர் ஏறி குதித்து இருக்கலாம் என கூறப்படுகிறது


இதனை அடுத்து நீலாங்கரை போலீசார் இளைஞர் பாண்டியன் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர். நடிகை கௌதமி வீட்டில் இளைஞர் பாண்டியன் சுவர் ஏறிக் குதித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.