தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளது!!

 


தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். இதனைத்தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், “ தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. அண்டை மாநிலங்களில் கொரோனா பரவல் குறைவு என கூறினார்கள். ஆனால் அங்கு தற்போது அதிகரித்துள்ளது.

கொரோனா பரவல் குறைந்திருந்தாலும் சராசரியாக தினமும் 70 ஆயிரம் பரிசோதனை நடைபெறுகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.